Main Menu

போதைப்பொருள் உட்கொண்ட சிறுவன் உயிரிழப்பு – பெற்றோர் கைது

போதைப்பொருள் உட்கொண்ட சிறுவன் ஒருவர் சாவடைந்துள்ளான். அவனது பெற்றோர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.  வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் Villeurbanne (Rhône) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்கு வசிக்கும் 11 வயது சிறுவன் ஒருவர் அதிகளவில் போதைப்பொருளை உட்கொண்டுள்ளான். மிக ஆபத்தான நிலையில் காலை 10.30 மணிக்கு அவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.  அதேவேளை, சிறுவனது தாய் மற்றும் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (நேற்று) காலை சாவடைந்துள்ளான். அதிகளவில் போதைப்பொருளை அவன் விழுங்கியிருந்ததால், அவனது இரத்தத்தில் அதிகளவு போதை கலந்திருந்ததாகவும், சிகிச்சை பலனளிக்கவில்லை எனவும் மருத்துவத்தரப்பு தெரிவித்துள்ளது.

பகிரவும்...