Main Menu

பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகிறது ஐ.தே.க.

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான கருத்துக்கள் மற்றும் திட்டங்கள் குறித்த அறிக்கையைத் தொகுத்து, ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தில் பேசிய ரணில் விக்ரமசிங்க, திட்டங்களை செயல்படுத்துவதன் மூலமே அடுத்த தேர்தலில் கட்சியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்று கூறினார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள கட்சியைத் தயார்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட அனைத்து திட்டங்கள் குறித்து பேசுவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதேவேளை, தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது தனி விவாதம் ஒன்று இடம்பெற்றதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...