Main Menu

பெண்கள் கொலை செய்யப்படும் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

பிரான்ஸில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 122 இற்கும் மேற்பட்ட பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் அவர்களது கணவராலோ அல்லது காதலனாலோ இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குடும்ப வன்முறைகள் காரணமாக இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குடும்ப வன்முறைகளுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் Nous Tous என்ற பெண்கள் பாதுகாப்பு அமைப்பு இதற்கு கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், விரைவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த 2018ஆம் ஆண்டு 121 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

பகிரவும்...