Main Menu

புத்தாண்டில் இடம்பெற்ற விபத்துகளினால் 413 பேர் வைத்தியசாலையில்

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் புத்தாண்டு பிறப்புடன் இடம்பெற்ற திடீர் விபத்துக்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது. 

நூற்றுக்கு 8 வீதத்தினால் இவ்வாண்டு விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் ஏற்பட்ட விபத்துக்களினால் 413 கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதில் 113 பேர் வீதி விபத்துக்கள் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 6% ஆல் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வீடுகளில் ஏற்பட்ட விபத்துக்களினால் 49 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 22% ஆல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்வருடம் தீ விபத்து காரணமாக 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அது கடந்த ஒருவர் மட்டுமே இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...