Main Menu

புதிதாக 2,451 பேருக்கு தொற்று- தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தினசரி பாதிப்பு

நாடு முழுவதும் இதுவரை 187 கோடியே 26 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று 18,03,558 டோஸ்கள் அடங்கும்.

இந்தியாவில் புதிதாக 2,451 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.
கடந்த 19-ந் தேதி பாதிப்பு 1,247 ஆக இருந்தது. மறுநாள் 2,067 ஆகவும், நேற்று 2,380 ஆகவும் இருந்த நிலையில், இன்று பாதிப்பு மேலும் உயர்ந்துள்ளது.

டெல்லியில் புதிதாக 965 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அங்கு நேற்றுமுன்தினம் பாதிப்பு 1009 ஆக இருந்த நிலையில் தொற்று பாதிப்பு விகிதம் 5.7 சதவீதத்தில் இருந்து 4.71 ஆக குறைந்துள்ளது.
கேரளாவில் புதிய பாதிப்பு 355-ல் இருந்து 332 ஆக குறைந்துள்ளது. அதே நேரம் அரியானாவில் தினசரி பாதிப்பு 310-ல் இருந்து 367 ஆகவும், மகாராஷ்டிராவில் 162-ல் இருந்து 179 ஆகவும் உயர்ந்துள்ளது. ஆனால் மிசோரத்தில் 103-ல் இருந்து 91 ஆக குறைந்துள்ளது.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 52 ஆயிரத்து 425 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பு காரணமாக கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 48 இறப்புகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுதவிர மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், பஞ்சாப், ஜார்கண்ட், உத்தரகாண்டில் தலா ஒருவர் என மேலும் 54 பேர் இறந்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,22,116 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சைபெற்று வந்த 1,589 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 16 ஆயிரத்து 68 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 14,241 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றுமுன்தினத்தை விட 808 அதிகம் ஆகும்.
நாடு முழுவதும் இதுவரை 187 கோடியே 26 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று 18,03,558 டோஸ்கள் அடங்கும்.
இதற்கிடையே நேற்று 4,48,939 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 83.38 கோடியாக உயர்ந்துள்ளது.

பகிரவும்...