Main Menu

புதிதாக தெரிவு செய்யப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பதவிப் பிரமாணம் இன்று!

உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) பதவியேற்கவுள்ளனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுளளார்.

வரலாற்றில் முதல் முறையாக ஒன்பது நீதிபதிகள் ஒன்றாக பதவிப்பிரமாணம் செய்துக்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

உச்சநீதிமன்ற கொலீஜியம் குழுவின் பரிந்துரைக்கு அமைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 9 பேரையும்; உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியையும் சேர்த்து மொத்தம் 34 நீதிபதிகள் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது பதவியேற்கவுள்ள 9 நீதிபதிகளையும் சேர்த்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...