Main Menu

பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்த பொரிஸ் ஜோன்சனின் தீர்மானத்திற்கு பாரிய பின்னடைவு!

பிரெக்ஸிற் ஒப்பந்தம் தாமதப்படுத்த வேண்டும் என்ற கொள்கைக்கு பிரித்தானிய பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர்.

பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது ஒப்பந்தமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு 322 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.

அத்துடன், தீர்மானத்துக்கு எதிராக 306 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

இதன்காரணமாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான தீர்மானம் மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பாக எதிர்வரும் 31ஆம் திகதிக்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கால அவகாசம் பெறவேண்டிய நிலையை பொரிஸ் ஜோன்சன் எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, தான் தனது பிரெக்ஸிற் ஒப்பந்தத்திற்காக எந்தவித அச்சமுமின்றி தொடர்ந்தும் செயற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பிரித்தானியா அறிவிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கடந்த 37 ஆண்டுகளில் சனிக்கிழமை ஒன்றில் பிரித்தானிய பாராளுமன்றம் கூடியமை இதுவே முதல்தடவையாகும்.

பகிரவும்...