Main Menu

பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை அறிமுகப் படுத்தியது பிரான்ஸ்!

இந்திய கொரோனா வைரஸ் மாறுபாடு தீவிரமாக பரவுவதால் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்திய சமீபத்திய ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.

மே 31ஆம் திகதி முதல், பிரித்தானியாவிலிருந்து வரும் எவரும் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடந்த வாரம் பிரித்தானியாவின் வருகைக்கு ஜேர்மனி இரண்டு வார தனிமைப்படுத்தலை விதித்தது. ஜூன் 1ஆம் திகதி முதல் பிரித்தானிய நேரடி விமானங்களுக்கு ஆஸ்திரியா தடை விதித்துள்ளது.

கடந்த வாரத்திற்குள், இங்கிலாந்தில் பி.1.617.2 மாறுபாட்டின் 3,424 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த எண்ணிக்கை முந்தைய வாரத்தை விட 2,111 தொற்றுகள் அதிகரித்துள்ளது.

இந்த குளிர்காலத்தில் பிரித்தானியாவின் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களுக்கு காரணமான கென்டில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட பிரித்தானிய மாறுபாட்டை விட இந்திய மாறுபாடு தீவிரமான என்று இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி கூறியுள்ளார்.

பகிரவும்...