Main Menu

பிரித்தானியா நோக்கி சட்டவிரோத பயணம்! – 138 அகதிகள் கடலில் இருந்து மீட்பு

பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி சட்டவிரோத பயணம் மேற்கொண்ட 138 அகதிகள் கடலில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் கடலில் பயணித்த 27 அகதிகள் கடலில் மூழ்கி சாவடைந்த சம்பவம் உலகையே உலுக்கியிருந்த நிலையில், இந்த சட்டவிரோத உயிராபத்தான பயணம் தொடர்ந்துகொண்டே உள்ளது. வியாழக்கிழமை, டிசம்பர் 16 ஆம் திகதி இரவு, பா து கலே கடற்பிராந்தியத்தில் இருந்து, சிறிய மீன்பிடி படகு ஒன்றில் பிரித்தானியா நோக்கி அகதிகள் பயணித்துள்ளனர்.

அவர்களை, நடு கடலில் வைத்து Société nationale de sauvetage en mer அதிகாரிகள் மீட்டனர்.

இரண்டு பிரெஞ்சு கடற்படையினரின் கப்பல்களில் அகதிகள் கரைக்கு அழைத்துவரப்பட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் Boulogne-sur-Mer நகர காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.  

பகிரவும்...