Main Menu

பிரான்ஸ் பராமரிப்பு இல்ல கொலை: சந்தேகநபராக 102 வயது பெண்

பிரான்ஸ் முதியோர் பராமரிப்பு இல்லமொன்றில் இடம்பெற்ற கொலை சம்பவத்தின் சந்தேகநபராக 102 வயது பெண்ணொருவர் பெயரிடப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கொலை சந்தேகநபர் மனநல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பராமரிப்பு இல்லத்திலிருந்து 92 வயதுடைய ஒருவர் கொலை செய்யப்பட்டார். முகத்தில் கடும் காயங்களுடன் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டிருந்தது.

மூச்சுத்திணரல் மற்றும் தலையில் பலத்த காயம் காரணமாகவே அவர் உயிரிழந்திருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தான் ஒருவரை கொலை செய்துவிட்டதாக குறித்த 102 வயது பெண், இல்ல பராமரிப்பாளரிடம் பதற்றத்துடன் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து மனநல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேகநபருக்கு உளவியல் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அவர் மேற்படி குற்றத்திற்கு பொறுப்பாளியாவாரா, இல்லையா என்பது தீர்மானிக்கப்படவுள்ளது.

பகிரவும்...