Main Menu

ஆசிய பெண்களை குறிவைத்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் – நான்கு இளைஞர்கள் கைது

ஆசிய பெண்களை குறிவைத்து கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்ட நான்கு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கடந்த சில வாரங்களில் பரிஸ் மற்றும்  Val-de-Marne ஆகிய இடங்களில், ஆசிய பெண்களை குறிவைத்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. கொள்ளையர்களை கைது செய்ய காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.  அதை தொடர்ந்து கடந்த வார புதன்கிழமை நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 17- 19 வாயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் Val-de-Marne இனைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  இவர்கள் கிட்டத்தட்ட பத்து கொள்ளைகள் வரை மேற்கொண்டதாக அறிய முடிகிறது. மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். கொள்ளைச் சம்பவங்கள் அனைத்தும் Ivry-sur-Seine மற்றும் Vitry-sur-Seine நகரைச் சேர்ந்த ஆசிய பெண்களை குறிவைத்து கொள்ளைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...