Main Menu

பிரான்ஸ் நாட்டு மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்

தடுப்பூசி போடும் பணி மிக விரைவாக இடம்பெற்று வருவதை அடுத்து தற்போது பிரான்ஸ் ஒரு புதிய மைல் கல்லை எட்டிப்பிடித்துள்ளது.  நாட்டு மக்களில் 50 வீதமானோர், (இரண்டில் ஒருவர்) தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின் படி, 33,690,499  பேர் (33 மில்லியன் பேர்) தங்களது முதலாவது தடுப்பூசியினை போட்டுக்கொண்டுள்ளனர். இது மக்கள் தொகையில் 50% வீதமாகும்.  அதேவேளை, நாட்டு மக்கள் தொகையில் மூன்றில் ஒரு வீதத்தினர் (மூவரில் ஒருவர்) தங்களது இரண்டாவது தடுப்பூசியினையும் போட்டுக்கொண்டுள்ளனர். 22,265,100 பேர் (22 மில்லியன்) இரண்டாவது தடுப்பூசியினையும் போட்டுக்கொண்டுள்ளனர். 

பகிரவும்...