Main Menu

பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

24 மணித்தியால தீவிர கண்காணிப்பின் கீழ் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பணியாற்றும் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பிரான்ஸில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 423 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று(வியாழக்கிழமை) மாத்திரம் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

பகிரவும்...