Main Menu

பிரான்ஸில் நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு உச்சத்தை தொட்டது!

பிரான்ஸில் நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால் 18ஆயிரத்து 746பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 80பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 11ஆவது நாடாக விளங்கும் பிரான்ஸில், இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்து 53ஆயிரத்து 509பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 32ஆயிரத்து 445பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை ஐந்து இலட்சத்து 21ஆயிரத்து 271பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 416பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை 99ஆயிரத்து 793பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

பகிரவும்...