Main Menu

பிரான்ஸில் அசுர வேகத்தில் பரவும் கொவிட்-19 தொற்று: ஒரேநாளில் 42ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 42ஆயிரத்து 032பேர் பாதிக்கப்பட்டதோடு, 298பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால், அதிகபாதிப்பை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரான்ஸில், இதுவரை பத்து இலட்சத்து 41ஆயிரத்து 075பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 34ஆயிரத்து 508பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை எட்டு இலட்சத்து 97ஆயிரத்து 081பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 441பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்து 486பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

பகிரவும்...