Main Menu

பிரதமரிடம் முஸ்லிம் பிரதிநிதிகள் சந்தித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை: மீள் பதவியேற்பு இன்று?

உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கிய நெருக்­கடி நிலைக்கு தீர்­வு­களைக் கோரி தங்­க­ளது அமைச்சுப் பத­ வி­களை இரா­ஜி­னாமா செய்து கொண்ட முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இன்று தங்­க­ளது அமைச்சுப் பத­வி­களை பொறுப்­பேற்றுக் கொள்­வார்கள் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இது குறித்து அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் அர­சியல் உயர் பீடம் நேற்று அவ­ச­ர­மாக ஒன்­று­கூடி தீர்­மானம் மேற்­கொள்­ள­விருந்ததாக அக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியும் நேற்று இரவு இச்­செய்தி எழு­தப்­படும் வரையில் கலந்­து­ரை­யாடல் நடாத்தி வந்­தது.

நேற்­று­மாலை  முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைச் சந்­தித்து முஸ்­லிம்­களின் தீர்க்­கப்­ப­டா­துள்ள பிரச்­சி­னைகள் வடமேல் மாகா­ணத்தில் அண்­மையில் வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான நஷ்ட ஈடுகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­னார்கள். அந்­நஷ்­ட­ஈ­டுகள் அடுத்த வாரம் வழங்­கப்­படும் என பிர­தமர் உறு­தி­ய­ளித்தார்.

பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்­பி­னை­ய­டுத்து முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம்.பௌஸியின் இல்­லத்தில் ஒன்­று­கூடி அமைச்சுப் பத­வி­களை பொறுப்­பேற்­பது தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­னார்கள்.

இக்­க­லந்­து­ரை­யா­ட­லின்­போது பெரும்­பா­லா­ன­வர்கள் அமைச்சுப் பத­வி­களை பொறுப்­பேற்­ப­தற்கு ஆத­ர­வாக கருத்து வெ ளியிட்­டார்கள் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 9 பேர் தங்கள் அமைச்சுப் பத­வி­களை கூட்­டாக இரா­ஜி­னாமா செய்து கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. அவர்­களில் ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான கபீர் ஹாஸிமும் எம்.எச்.ஏ.ஹலீமும் தங்களது முன்னைய அமைச்சுப் பதவிகளை ஏற்கனவே பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 7 பாராளுமன்ற உறுப்பினர்களே அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பகிரவும்...