Main Menu

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு – சல்மான் கான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தொகுத்து வழங்கும் சல்மான்கான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு - சல்மான் கான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

பிக்பாஸ்தனியார் தொலைக்காட்சி ஒன்றில் “பிக்பாஸ் சீசன் 13” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் ஒரே படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற புதிய போட்டியும் உள்ளது.

இதற்கு கர்ணிசேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்தப் போட்டி இந்திய கலாசாரத்துக்கு எதிராகவும், ஆபாசத்தை ஊக்குவிக்கும் விதமாக இருப்பதாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள சல்மான்கான் வீட்டு அருகே கர்ணிசேனா அமைப்பை சேர்ந்தவர்களும் பிற அமைப்பில் உள்ளவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோ‌ஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழாமல் இருக்க நடிகர் சல்மான்கான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டு முன்பு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பகிரவும்...