Main Menu

பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள் கடுமையாக்கப் படக்கூடும் – ஆஸ்திரேலியப் பிரதமர்

ஆஸ்திரேலியாவில் COVID-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள் கடுமையாக்கப்படக்கூடும் என்று அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

அண்மை நாள்களில் ஆயிரணக்கணக்கானோர் ஆஸ்திரேலியக் கடற்கரைகளுக்குச் சென்றதைத் தொடர்ந்து பிரதமர் மோரிசன் அவ்வாறு கூறினார்.

நேற்று சிட்னியின் முக்கியக் கடற்கரைகள் பல மூடப்பட்டன.

கிருமிப் பரவல் ஏற்படக்கூடிய பகுதியில் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளைக் கடுமையாக்குவது குறித்து இன்றிரவு மாநில அரசாங்கத் தலைவர்களோடு கலந்து ஆலோசிக்கப்படும் என்றார் திரு. மோரிசன்.  

பகிரவும்...