Main Menu

பாடசாலைகள் திறப்பதை பிற் போடுமாறு மருத்துவர்கள் கோரிக்கை

பாடசாலைகள் திறக்கும் திகதியை பிற்போடுமாறு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனவரி 3 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்பட உள்ள நிலையில், இரு வாரங்களுக்கு பாடசாலைகள் திறப்பதை பிற்போடுமாறு மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 50 மருத்துவர்கள் இணைந்து கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதி சுகாதார அமைச்சர் Olivier Véran இற்கு அனுப்பியுள்ளனர்.

“கணிக்கமுடியாத அளவிற்கு கொரோனா தொற்று பரவி வருகின்றது. குறிப்பாக உயர்கல்வி பாடசாலை மாணவர்களிடையே தொற்று வேகமாக பரவுகின்றது. இதனால் பாடசாலைகள் திறப்பதை அரசு பிற்போடவேண்டும்!” என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில், “கடந்த 6 நாட்களில் 300 வரையான சிறுவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நவம்பர் மாத ஆரம்பத்தில் இருந்து 300,000 மாணவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்” போன்ற தகவல்களைச் சுட்டிக்காட்டி, இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். 

பகிரவும்...