Main Menu

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக இதுவரையில் 75 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.

பலூசிஸ்தான் மாகாணத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளது.

பனிப்பொழிவு காரணமாக குறித்த மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரயில் மற்றும் வீதி போக்குவரத்து சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. குவெட்டா நகரில் உள்ள விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது.

பலூசிஸ்தானில் பனிப்பொழிவு மற்றும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதையடுத்து, 7 மாவட்டங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

பகிரவும்...