Main Menu

பலத்த பாதுகாப்பை தாண்டி – இராணுவ அமைச்சகத்தில் வாகனம் தீயிடப்பட்டதால் பரபரப்பு!

நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பரிசில் உள்ள இராணுவ அமைச்சகத்தில் நின்றுகொண்டிருந்த வாகனம் ஒன்று எரியூட்டப்பட்டுள்ளது. 

பலத்த பாதுகாப்பின் கீழ் இருக்கும் ஒரு பகுதியில், கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டிருக்கும் இடத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு வாகனத்தை மர்ம நபர்கள் தீயிட்டு கொழுத்தியுள்ளனர். பெற்றோல் எரிகுண்டு வீசப்பட்டு வாகனம் தீயிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த டிரக் வாகனம் சம்பவ இடத்தில் இருந்து அகற்றப்பட்டபோதும், இது தொடர்பான தடயங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.  வாகனம் Avenue d’Issy, (Porte de Versailles) இல் நிறுத்தப்பட்டடிருந்துள்ளது.

இதன் அருகே பொதுமக்கள் பூங்கா (Parc des Expositions) ஒன்றும் உள்ளது. ஆனால் அங்கிருந்து இச்செயலை மேற்கொள்ள முடியுமா என காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  அதிகாலை 3.57 மணிக்கு தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு வாகனத்தின் தீ அணைக்கப்பட்டது.

பகிரவும்...