Main Menu

பருவப்பெயர்ச்சி மழை : தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடக்கு கிழக்கு பருவப்பெயர்ச்சி மழை வலுபெற்றதன் காரணமாக தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கிலிருந்து மீண்டும் பருவகாற்று வீச தொடங்கியதால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது.

பகிரவும்...