Main Menu

பருவகால மாற்றத்தின் விளைவாக பரவும் வைரஸ் காய்ச்சல்

பருவகால மாற்றத்தின் விளைவாக பரவும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தெற்கு அவுஸ்ரேலியாவில் இந்த வருடம் மாத்திரம் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் தெற்கு அவுஸ்ரேலியாவில் (flu) பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் கடந்த 2018 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட 12 ஆயிரத்து 339 பேரில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதனை விட இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட இந்த வருடம் 1328 அதிகம் என்றும் சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும் தெற்கு அவுஸ்ரேலியாவில் முதியோர் இல்லங்களில் உள்ளவர்கள் மிக அதிக எண்ணிக்கையில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதில் குறித்த முதியோர் இல்லங்களிலேயே 13 பேர் உயிரிழந்தனர் என்றும் இதனையடுத்து, தெற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள 17 முதியோர் இல்லங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடப்படுவதன் மூலம் இந்தக்காய்ச்சலின் பரவலைத்தடுப்பதற்கு முழு முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் இதுவரை சுமார் நான்கரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...