Main Menu

பரிஸ் – காவல்துறை அதிகாரியை தாக்க வந்த நபர் சுட்டுக்கொலை

இன்று வெள்ளிக்கிழமை காலை பரிசில் நபர் ஒருவர் காவல்துறை அதிகாரியை கத்தியால் தாக்க முற்பட்டுள்ளார்.  La Défense பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 10 மணி அளவில், மூன்று காவல்துறை அதிகாரிகள் La Défense பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது, நபர் ஒருவர் அவர்களை தாக்க முற்பட்டுள்ளார்.  கைகளில் கூரான கத்தி ஒன்று வைத்திருந்ததாகவும், அதன் மூலமாக அதிகாரிகளை தாக்க முற்பட்டதாகவும் அறிய முடிகிறது. பின்னர் தாக்க வந்த நபர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலதிக விபரங்கள் எதுவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

பகிரவும்...