Main Menu

பரந்தன் பகுதியில் பொலிஸ் காவல் அரண் அமைப்பு!

பரந்தன் நகரப்பகுதியில் அண்மைக்காலமாக இரவு வேளைகளில் பல்வேறு வகையான குற்றச் செயல்களைத் தடுக்கும் முகமாக பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் கொலை, ஆள் மிரட்டல் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் என பல்வேறு விதமான சட்ட விரோத செயல்கள் இடம்பெறுவதாகப் பல முறைப்பாடுகள் குறித்து பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றன.

அம்முறைப்பாடுகளுக்கு அமைய நேற்று பரந்தன் நகரப் பகுதியில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

காவலரண் 24 மணி நேரமும் செயற்படும் எனவும் இதனால் இப்பகுதியில் சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...