Main Menu

பயணத் தடைகள் மூலம் ஒமிக்ரோன் தொற்று பரவலை தடுத்து நிறுத்திவிட முடியாது

பயணத் தடைகள் மூலம் ஒமிக்ரோன் தொற்று பரவலை தடுத்து நிறுத்திவிட முடியாது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அத்தகைய தடைகளால் உலகளாவிய சுகாதார முயற்சிகள் மோசமாக பாதிக்கும் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டஒமிக்ரோன் வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறித்த பாதிப்புள்ள தென்னாபிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹொங்கொங், பிரித்தானியா, உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வருவோருக்கு பயணத் தடைகள் மூலம் தொற்று பரவலை தடுத்து நிறுத்திவிட முடியாது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்ததுள்ளது.

மேலும் பயணத் தடைகள் மூலம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு மற்றும் வாழ்வாதாரத்தின் மீது பெரும் சுமையையே ஏற்படுத்தும் என்றும் ஆபத்துக்களை நீக்கும் வகையில் உலக நாடுகள் அத்தியவாதிய சுகாதார கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

பகிரவும்...