Main Menu

பசிலின் வருகைக்காக 113 உறுப்பினர்கள் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு கடிதம்

பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக்க கோரி, ஆளும் கட்சியின் 113 உறுப்பினர்கள் கடிதம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளனர்.

குறித்த கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) பத்தமுல்லையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றம் வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பல தடவைகள் அழைப்பு விடுத்திருந்தார் என்றும் ஜகத் குமார தெரிவித்தார்.

எதிர்வரும் தினங்களில் பசில் ராஜபக்ஷ இணக்கம் தெரிவிப்பார் என தாம் நம்புவதாகவும் ஜகத் குமார குறிப்பிட்டார்.

பகிரவும்...