Main Menu

நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி இன்று ஆலோசனை

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(புதன்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுந்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

எனினும், கொரோனா வைரசால் தமிழகத்தில் இதுவரை ஆயிரத்து 204 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் மே 3ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்நிலையில் நோய் தொற்றை தடுப்பது தொடர்பாகவும், கொரோனா தொற்று குறைந்த அளவில் பாதித்த பகுதிகளை கண்டறிந்து ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகின்றது.

பகிரவும்...