Main Menu

நூற்றுக் கணக்கான அரச படையினர் தலிபான்களிடம் சரணடைவு !

அண்மையில் கைப்பற்றப்பட்ட ஆப்கானிஸ்தான் குண்டூஸ் பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான அரச படையினர் தலிபான்களிடம் சரணடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வீரர்கள், பொலிஸார் மற்றும் எதிர்ப்புப் படைகளின் உறுப்பினர்கள் ஆயுதங்களை கையளித்து சரணடைந்ததாக குண்டுஸ் மாகாண சபை உறுப்பினர் அம்ருதீன் வாலி தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் துருப்புக்கள் தொடர்ந்து பின்வாங்குவதால் தாலிபான் போராளிகள் குழு தற்போது ஆப்கானிஸ்தானின் மாகாண தலைநகரங்களில் கால் பகுதிக்கு மேற்பட்டவற்றினை கைப்பற்றியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க தலைமையிலான வௌிநாட்டு படையினர் மீள அழைக்கப்பட்டதிலிருந்து தலிபான்கள் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...