Main Menu

நான் மோடியை வீழ்த்தும் வரை போராடுவேன் – ராகுல் காந்தி!

நான் மோடியின் கொள்கைகள் மற்றும் எண்ணங்களுக்கு எதிராக போராடுகிறேன். அவரை வீழ்த்தும் வரை நான் பின்வாங்க மாட்டேன் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ இளைஞர்களுக்கு வேலைகள் வழங்கப்படும் என நிதிஷ் குமார் வாக்குறுதி அளித்தார். ஆனால் அதை அவரால் நிறைவேற்ற முடியவில்லை.  இது குறித்து  கேள்வி கேட்கும் இளைஞர்கள் விரட்டி அடிக்கப்படுகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியும்,  முதல்வர் நிதிஷ் குமாரும்  ஊரடங்கு காலத்தில் ஏழை மக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு உதவவில்லை.ஆனால்  இப்போது அவர்களிடமே வந்து ஓட்டு கேட்கின்றனர்.

பீஹார் மக்கள் அதை ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.தேர்தலுக்கு பயன்படுத்துவது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அல்ல. மோடி வாக்குப்பதிவு இயந்திரம். எனினும்  அவற்றை கண்டு நான் அஞ்சமாட்டேன்.

நான் மோடியின் கொள்கைகள் மற்றும் எண்ணங்களுக்கு எதிராக போராடுகிறேன். பொதுக் கூட்டங்களில் மோடி என்னை பற்றி பலமுறை இழிவாக பேசிவுள்ளார். நான் அதை பொருட்படுத்தமாட்டேன். அவரை வீழ்த்தும் வரை  நான் பின்வாங்கமாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...