Main Menu

“நாட்டையும், நாட்டு மக்களையும் வெற்றிபெறச் செய்வதொன்றே எமது நோக்காகும்”

நாட்டையும், நாட்டு மக்களையும் வெற்றிபெறச் செய்வதே பொதுஜன பெரமுனவின் ஒரே நோக்கமாகும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக்ஷ, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் போட்டியிட முடியாத நிலையேற்பட்டுள்ளமையால், அவரால் நியமிக்கப்படும் ஜனாதிபதி வேட்பாளரைக் களமிறக்குவோம் எனவும் கூறினார்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக்காரியாலயத்தில் சாந்திகரும கலைஞர்கள் சங்கத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

நாட்டின் பாரம்பரிய தனித்துவ அடையாளங்களைப் பாதுகாப்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்கால அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகக் காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பகிரவும்...