Main Menu

நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார் கோட்டாபய!

நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றித் தெரிவித்துக் கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோட்டாபய தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

வன்முறைகள் அற்ற அமைதியான தேர்தலை நடத்த உதவிய நாட்டு மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல், நேற்றையதினம் அமைதியான முறையில் நடைபெற்று, தற்போது  ஒவ்வொரு மாவட்டத்துக்கான தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் தற்போது வெளியான தேர்தல் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அல்லாத பகுதிகளில் கோட்டாபய  முன்னிலை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...