Main Menu

நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றால் அனைத்தும் செயலிழந்து விடும்

தேசிய பாதுகாப்பிற்கு முதலிடம் வழங்கும் ஒழுக்கம் ஒன்று நாட்டிற்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

நேற்று (23) கண்டி, கெட்டம்போ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றால் அனைத்தும் செயலிழந்து விடும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். 

பல வருடங்களாக இல்லாமல் இருந்த பாதுகாப்பை மீண்டும் கட்டியெழுப்பி எவ்வித பயமும் இல்லாத யுகம் ஒன்றை தான் வழங்கியதாகவும் மக்களிடையே தான் தான் யுத்தத்தை நிறைவு செய்வேன் என மக்கள் நம்பிக்கை வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தற்போது நாட்டில் நிலையற்ற ஆட்சி நிலவுவதாகவும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் கயிறிழுத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

பகிரவும்...