Main Menu

நாட்டிலுள்ள சகல இந்து மக்களிடமும் விடுக்கப் பட்டுள்ள கோரிக்கை!

எதிர்வரும் தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு இந்து மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள சகல இந்து மக்களிடமும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.ஸ்ரீதரன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளை, தீபாவளிப் பண்டிகையை வீடுகளில் இருந்து தமிழ் மக்கள் கொண்டாட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்துக்களது பாரம்பரியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகையானது இம்மாதம் 14ஆம் திகதி உலக வாழ் இந்துக்களால் கொண்டாடப்படவுள்ளது.

பகிரவும்...