Main Menu

நாடு முழுவதுமான 8 குண்டு வெடிப்புகளில் 188 பேர் பலி 469 பேர் காயம்!

கொழும்பு, தெமட்டகொடை  காவற்  பிரிவுக்குட்பட்ட பகுதியில்  இடம்பெற்ற குண்டு வெடிப்பில்  காவற்துறை  உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் இன்று இடம்பெற்ற 8 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 188 பேர் உயிரிழந்துள்ளதுடன் 469 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கையில் இன்று காலை ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை தொடர்ந்து நண்பகல் இரண்டு மணியளவில், தெகிவலையில் மேலும் ஒரு குண்டுவெடிப்பு நடந்துள்ளது. மேலும், தெமடகொட பகுதியில் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தெகிவலையில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு எதிரே உள்ள கட்டடம் ஒன்றில் இந்த குண்டு வெடித்துள்ளதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரியல் பூங்கா மூடப்பட்டது. மேலும், தெமடகொட பகுதியில் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 3 காவற்துறை அதிகாரிகள் பலியாகியுள்ளனர்.  மூவர் காயம் அடைந்து வைதஹ்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.

பகிரவும்...