Main Menu

நடனமாடியபடி மேடைக்கு வந்த மாணவனுக்கு பட்டம் வழங்க மறுப்பு

கல்லூரி மாணவருக்கு பட்டமளிப்பு விழா நடைபெறும் நாளை வாழ்நாளில் மறக்க முடியாது. அன்றைய தினத்தை சிறப்பானதாக கொண்டாடுவார்கள். இந்நிலையில் மும்பையில் ஒரு கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், பட்டம் வாங்குவதற்காக மேடை ஏறிய கோத்தாரி என்ற மாணவர் நடனமாடியபடி செல்லும் காட்சிகள் உள்ளது. இதை பார்த்த பேராசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் ஒரு பேராசிரியர் ஆவேசம் அடைந்து நாங்கள் உனக்கு பட்டம் வழங்க போவதில்லை என கூறுகிறார். அதை கேட்டதும் மாணவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். அதன்பிறகு பேராசிரியர்கள் அந்த மாணவரை எச்சரிக்கை செய்து அறிவுரைகள் வழங்கி பட்டத்தையும் கொடுத்தனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், பேராசிரியர்கள் இவ்வளவு ஆவேசமாக நடந்து கொள்ள கூடாது. ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து அவர்கள் ஏன் விரக்தி அடைகிறார்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார். அதே நேரம் சில பயனர்கள் மாணவரின் செயலை விமர்சித்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

பகிரவும்...