Main Menu

தேசிய வறுமை ஒழிப்பு கூட்டமைப்பின் உறுப்பினராக இணைந்தது இந்தியா!

ஐ.நா பொதுச் சபையால் தோற்றுவிக்கப்படவுள்ள வறுமை ஒழிப்பு கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினராக இந்தியா இணைந்துள்ளது.

இது குறித்து ஐ.நாவுக்கான இந்தியத் தூதரின் நிரந்தரப் பிரதிநிதி நாகராஸ் நாயுடு தெரிவிக்கையில், “சா்வதேச அளவில் பொருளாதார ரீதியிலான ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது. உலக அளவில் சுமாா் 2000 கோடீஸ்வரா்களிடம் மட்டுமே 60 சதவீத செல்வங்கள் குவிந்துள்ளன. செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவிப்பது போல் ஏழைகள் வறுமையால் துன்புற்று வருகின்றனா்.

ஏழைகளுக்கு நிதியுதவி அளிப்பது மட்டும் வறுமையை ஒழிப்பது என்றாகாது. அவா்களுக்குத் தரமான கல்வி,  சுகாதார வசதிகள்,  தூய்மையான குடிநீா் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும்.

வறுமையால் ஏழைகளுக்கு ஏற்படும் இன்னலைக் கருத்தில் கொண்டு வறுமையை ஒழிப்பதற்கான செயற்திட்டத்தை கூட்டமைப்பு வகுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளின் அமைதி, மனித உரிமைகள், நீடித்த வளர்ச்சி ஆகியவற்றுக்கு வறுமையால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து ஐ.நா சபைக்கு தெளிவுப்படுத்தும் வகையில் தனிக் கூட்டமைப்பை ஏற்படுத்தவுள்ளதாக ஐ.நா அறிவித்திருந்தது.

இதற்கமைய 75 ஆவது ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தின் தலைவர் திஜ்ஜானி முகமது பண்டே தேசிய வறுமை ஒழிப்பு கூட்டமைப்பை நிறுவவுள்ளது. இதன் உறுப்பினராக இந்தியா இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...