Main Menu

தேசியவாதி என்பதாலேயே மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் மோதினார் – நாமல் ராஜபக்க்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் இனவாதிகள் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேசியவாதி என்பதாலேயே மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடனும் மோதினார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குருணாகலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “ஐக்கிய தேசியக் கட்சியினர் எம்மை இனவாதிகள் என கூறுகின்றனர். ஆனால் நாம் தேசியவாதிகள். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரம் மோதவில்லை. மாறாக ஜே.வி.பி.யுடனும் மோதியுள்ளார். ஜே.வி.பி. என கூறுவது தமிழ், முஸ்லிம் இனத்தவர்கள் அல்லர். மாறாக அவர்கள் சிங்கள இனத்தவர்கள்.

தேசியவாதி என்பதாலேயே மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடனும் மோதினார்.

இதேவேளை, மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டுமானால் ஜனாதிபதி என்பவர் அவர்களின் காலடிக்கு செல்வதனை விடுத்து ஒரு வலுவான பொருளாதாரக் கொள்கையை உருவாக்க வேண்டும்.

வேட்பாளர்கள் தமது சரியான கொள்கைகளை முன்வைத்தால் மாத்திரம் போதும் அவர்களின் காலடிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...