Main Menu

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பையொட்டி அலைமோதும் கூட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை நடைபெறவுள்ள வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பையொட்டி, பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

நாளை அதிகாலை 12.30 மணிக்கு வைகானஸ ஆகம முறைப்படி சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும், அதிகாலை 2 முதல் 4.30 மணி வரை மத்திய-மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோரும், அதிகாலை 4.30 முதல் 5 மணி வரை பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் பங்கேற்று தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

24 மணி நேரமும் தரிசனத்திற்காக காத்திருக்க வேண்டி உள்ளதால் பக்தர்கள் காத்திருக்கும் இடத்தின் அருகிலேயே உணவு விநியோகம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இன்று முதல் 3 நாட்களுக்கு அனைத்து முன்னுரிமை மற்றும் கட்டண சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பகிரவும்...