Main Menu

திமுக எம்பி ஆ.ராசாவின் மனைவி காலமானார்

திமுக எம்பி ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

ஆ.ராசா மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரிசென்னை:
திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்றுநோய் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 6 மாதமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
பரமேஸ்வரிக்கு அளித்துவந்த கீமோதெரபி அவரது உடலுக்கு ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அதனால் அவருக்கு நோய் தொற்று தீவிரமானதாக கூறப்படுகிறது. மனைவியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு ஆ.ராசா அவருடன் தங்கி அவரை கவனித்து வந்தார். 

இந்நிலையில் பரமேஸ்வரியின் உடல்நிலை இன்று மேலும் மோசமடைந்து கவலைக்கிடமானது. அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்குச் சென்று, அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து விசாரித்தார்.
அதன்பின்னர் பரமேஸ்வரியின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் டாக்டர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி இன்று மாலை பரமேஸ்வரியின் உயிர் பிரிந்தது. அவரது மறைவு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி திமுகவினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பகிரவும்...