Main Menu

திட்டமிட்டபடி 23-ந்தேதி பொதுக்குழு நடைபெறும்- எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தகவல்

அ.தி.மு.க. பொதுக் குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளது குறித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:- அ.தி.மு.க. பொதுக் குழுவை இப்போது நடத்தக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் முட்டுக்கட்டை போடுவது கடந்த சில நாட்களாகவே தெரியவந்தது. அதை நிரூபிக்கும் வகையில் இப்போது அவர் கடிதம் எழுதி உள்ளார். அ.தி.மு.க.வுக்கு அமைப்பு ரீதியான தேர்தல் நடந்து முடிந்துள்ளதால் அவர்களை வைத்து பொதுக் குழுவை நடத்தலாம் என்றும், பிற அணிகளின் மாவட்ட செயலாளர்கள் இந்த பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க வேண்டாம் என்றும் முடிவு செய்யப்பட்டு அழைப்பு அனுப்பப்படவில்லை. எனவே அந்த வகையில் பொதுக்குழுவை கூட்டுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. போலீஸ் பாதுகாப்பும் கேட்கப்பட்டுள்ளது. எனவே பொதுக்குழுவுக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் திட்டமிட்டபடி 23-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பகிரவும்...