Main Menu

தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்- தேடுதல் நடவடிக்கை!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அங்கு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மிரட்டல், இன்று (வியாழக்கிழமை) விடுக்கப்பட்ட நிலையில், தாஜ்மஹாலில் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டதுடன் தாஜ்மஹால் தற்காலிமாக மூடப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தொலைபேசி ஊடாகப் பேசிய மர்மநபர், தாஜ்மஹாலுக்குள் வெடிகுண்டு இருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ஆக்ரா பொலிஸின் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் வெடிகுண்டு நிபுணர்களுடன் தீவிர தேடுதலை முன்னெடுத்துள்ளனர்.

எனினும், தேடுதல் நடவடிக்கையில் குண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்றபோதும், தாஜ்மஹாலின் பாதுகாப்பு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...