Main Menu

தற்கொலைக்கு முயற்சி செய்த சிறுமியால் வவுனியா வைத்திய சாலையில் பரபரப்பு

வவுனியா வைத்தியசாலையின் மாடிக்கட்டத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சிறுமியால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

ஈச்சங்குளம் பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுமியே இவ்வாறு  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தற்கொலை செய்வதற்கு முயற்சித்ததாக வைத்தியசாலை நிர்வாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சிறுமி வைத்தியசாலையின் இரண்டாவது மாடிக்கட்டடத்தில் ஏறி கீழே குதிக்க போவதாக தெரிவித்த நிலையில், விரைந்து செயற்பட்ட வைத்தியசாலை ஊழியர்கள் மாடிக்கட்டடத்தில் ஏறி அவரை மீட்டுள்ளனர்.

காதல் விவகாரத்தினாலேயே, தற்கொலைக்கு முயன்றதாக குறித்த சிறுமி அங்கிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தினால் வவுனியா வைத்தியசாலையின் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...