Main Menu

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து புதிய ஜனாதிபதியுடன் பேசுவதற்கு தயார் – மாவை

நாட்டில் பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதே வேளை தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அவருடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்திருந்த போதிலும், கோத்தாபய ராஜபக்ஷவே வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் கூட்டமைப்பின் எதிர்கால நிலைப்பாடு குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

எவ்வாறிருப்பினும் தமிழ் மக்கள் இனப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை எதிர்பார்த்து தான் சஜித் பிரேமதாசவுக்கு ஆதவளித்தனர். மக்களின் அவ்வாறான கோரிக்கைகளை நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் கோதாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டு அவை தொடர்பிலும் ஆராய வேண்டும். 

எனவே இவ்விடயம் குறித்து அவர் எம்மோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அழைத்தால் அதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். எதிர்வரும் தினங்களில் இது குறித்து ஆராயப்படும் என்றும் அவர் கூறினார்.

பகிரவும்...