Main Menu

தமிழிசையை விட ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் கனிமொழி

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசையை விட கனிமொழி ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார்.

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகிறது. தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிட்டனர்.

தற்போது வரை கனிமொழி 2,18,377 வாக்குகள் பெற்றுள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் 80,215 வாக்குகள் பெற்றுள்ளார். தமிழிசையைவிட கனிமொழி ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 162 வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 18143 வாக்குகள் பெற்றுள்ளார்.

பகிரவும்...