Main Menu

“தமிழர்களுக்கான தியாகங்களை செய்யத் தயார், கோத்தாபயவின் வெற்றியில் தமிழர்களது பங்களிப்பு இருக்க வேண்டும்”

தமிழ் மக்களுக்காக  விசேட தியாகங்களை செய்ய நாம் தயாராக உள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அவ்வாறெனில் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியில் தமிழ் மக்களின் முழுமையாக பங்களிப்பு இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

அத்துடன் நிறைவேற்ற முடியாத ஐந்து காரணிகளில் தமிழ் சிங்கள மக்கள் மோதிக்கொள்வதை விடவும் முடியுமான நூறு விடயங்களில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் வகையில் தமிழ் சிவில் பிரதிநிதிகளுடன் இணைந்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். 

பகிரவும்...