Main Menu

தமிழக தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.கவின் முக்கிய தலைவர்கள்!

தமிழகத்தில் அடுத்த மூன்று மாதங்களுக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட பா.ஜ.க  தலைமை வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தமிழகத்தில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி பா.ஜ.கவை வலுப்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா  நாடு தழுவிய சுற்றுப்பயணத்தை ஏற்கனவே ஆரம்பித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க கைகாட்டும் கட்சி தான் ஆட்சியைப் பிடிக்கும்’ என தமிழக பா.ஜ.க தலைமை கூறியுள்ளது.

இந்நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் நடத்தி வரும் வேல் யாத்திரை  மக்களின் கவனம் பெற்றுள்ளது. இதுவும் பா.ஜ.கவின் வெற்றிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...