Main Menu

தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும் – ஸ்டாலின்

காவிரி என்பது கர்நாடகத்துக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் முழு உரிமை கொண்டது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேகதாது விவகாரம் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிலையில், இதன்போது கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ‘மேகதாது அணையால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை என்று கர்நாடகம் கூறுவதில் துளியளவும் உண்மையில்லை.

தமிழ்நாட்டிற்கு காவிரி என்பது வாழ்வுரிமை என்பதால், மேகதாது அணை கட்டினால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். கர்நாடகத்துக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் காவிரியாறு முழு உரிமை கொண்டது.

கர்நாடகத்தை விட தமிழகத்தில்தான் அதிகமான நீளத்துக்கு காவிரி பாய்கிறது. தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்பதாலேயே அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...