Main Menu

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று சென்னையை சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய் பாதித்தோரின் எண்ணிக்கை 38-ஆக அதிகரித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 2 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகளிலிருந்து திரும்பிய கும்பகோணத்தை சேர்ந்த 42 வயது நபரிடம் இரத்த மாதிரி உள்ளிட்டவை பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் அவருக்கு கொரோனா உறுதியானதால், அவர் தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் காட்பாடியை சேர்ந்த 49 வயது நபர், பிரித்தானியாவிலிருந்து அண்மையில் திரும்பியிருந்தார்.

அவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று நோய் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

அவர் தற்போது வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள இரண்டு பேருமே வெளிநாடுகளில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள் வழியாக தமிழகம் வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

பகிரவும்...