Main Menu

தமிழகத்தில் கணிசமான மருத்துவர்கள் தாதியரும் கொரோனாவால் பாதிப்பு!

தமிழகத்தில் 8 மருத்துவர்களும், 5 தாதியர்களும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக சுகாதாரத் துறையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 8 மருத்துவர்களில் இருவர் மாநில அரசின் மருத்துவர்கள் எனவும் இருவர் ரயில்வே மருத்துவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

4 மருத்துவர்களும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்கள் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, 5 தாதியர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வரவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பகிரவும்...